கோவிலில் நடந்த கலாட்டா.. விஷாலின் விளையாட்டுகள் 10

Su.tha Arivalagan
Apr 14, 2026,10:36 AM IST

- பா. பானுமதி


விஷால் அவனுடைய அம்மாவும் பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு போனார்கள் வீட்டில் அன்று தொலைக்காட்சியில் பிரியா படம் பாடல் ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருந்தான் விஷால். 


கோவிலுக்கு சென்று அர்ச்சனை நடந்து கொண்டிருந்த போது  ஒரு சிறிய பெண் குழந்தையும் தன் அம்மாவுடன் கோவிலுக்கு வந்திருந்தது .


இங்கே தான் ஆரம்பமானது பிரச்சனை கருவறையில் "ஆஞ்சநேயா வித் மஹே வாயுபுத்திராய தீமஹி தன்னோ அனும பிரசோதயாத் " என்று மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்க இங்க விஷாலோ அந்தப் பெண் குழந்தையை பார்த்து "டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ என்னை விட்டுப் போகாதே" என்று மெதுவான குரலில் பாடினான்.




அந்த குழந்தையும் சற்று மிரள... தன் அம்மாவின் சேலை பிடித்துக்கொள்ள அவர் அம்மாவோ கண்களை மூடி இறைவனை வணங்கிக் கொண்டிருந்தார் .


விஷால் பாடலை நிறுத்தாமல் பாடிக் கொண்டிருக்க "வேண்டாம் விஷால் இந்த பாடலை பாடக்கூடாது அனுமன் காயத்ரி சொல்" என்று அவன் அம்மா கூற அவன் கண்டு கொள்ளவில்லை .


அந்த குழந்தையை தன்னுடைய அம்மாவின் சேலையை பிடித்து உலுக்கி விஷாலை கை காட்ட அவர் அம்மாவும் வேகமாக விஷால் நோக்கி வர  போர்க்களம் ஒன்று உருவாக இருந்தது. உடனே விஷால் அம்மா விஷாலுக்கு விவரம் தெரியாது என்று விபரத்தை கூறி அதை அந்த அம்மாவும் புரிந்து கொள்ள பிரச்சனை ஏதும் இன்றி சிரித்தபடியே பிரசாதம் பரிமாறி விடைபெற்றுச் சென்றனர் .


இல்லை என்றால்....


தொடரும்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)