காதலர் தினம் .. அதை ஏன் இன்று கொண்டாடுகிறோம் தெரியுமா?
- கவிஞர் க. முருகேஸ்வரி
இன்று பிப்ரவரி 14 காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கிபி 3 ஆம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் இளைஞர்கள் இள வயதில் திருமணம் செய்து கொண்டால் போர்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று திருமணத்திற்கு தடை விதித்தார்.
இயற்கைக்கு புறம்பான அந்தத் தடையை மீறி காதலர்களுக்கு மறைமுகமாக திருமணம் செய்து வைத்தார் புனித வாலண்டைன் என்ற மதகுரு.
இதனைத் தெரிந்து கொண்ட அரசர் புனித வாலண்டைனை தூக்கிலிட்ட நாள் தான் பிப்ரவரி 14. அவரது நினைவாகவும் உண்மைக் காதலைப் போற்றும்வகையிலும் ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் வாலண்டைன்ஸ் டே
காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
தற்போது அனைவரும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தினமாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை காதலர் வாரமாகவும் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள்களில் பரிசுப் பொருட்களும் வாழ்த்து அட்டைகளும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
சரி இவ்வளவு சொல்லியாச்சு.. அப்படியே ஒரு காதல் கவிதையும் சொல்லிர்றேன்.. அதையும் படிச்சுட்டுப் போங்க பிரண்ட்ஸ்!
காதல் படுத்தும் பாடு
சோறு தண்ணி இறங்க மறுத்து
நீ வரக் காத்திருந்து
நேரத்தை வீணடித்து
கவிதை என்ற பெயரில்
காகிதத்தை கசக்கி எறிந்து
பொய் சொல்லக் கற்றுக் கொடுத்து
தூக்கத்தைத் துரத்தி
தவியாய் தவிக்க விட்டு
நீ விட்டுப் போனாய் என்பதற்காக
இத்துப் போன பொருட்களை மறைத்து வைத்து
படிப்பையும் மூட்டை கட்டி
தாய் தந்தை அன்பை மறந்து
அண்ணன் தம்பி உறவைப் பிரிந்து
ஆயிரம் ஆயிரம் வேதனைகள் அனுபவித்து
இந்தப் பாழாய் போன காதல்..
காலம் கடந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
இது காதல் படுத்தும் பாடு......!
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).