குழந்தையின் குறும்பு

Su.tha Arivalagan
Feb 07, 2026,02:57 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


அம்மா  சமையல் அறையிலே 

பாப்பா அம்மா அருகிலே 

சமையலில் அம்மா மும்முரமாம் 

பாப்பா விளையாட்டில் பம்பரமாம் 

சாதம் உளையில் கொதிக்குதாம் 

பாப்பா அஞ்சறைப்பெட்டியை உடைத்ததாம்.....

அம்மா முகத்தில் கடுகு வெடித்ததாம் 

பாப்பா முகத்தில் சிரிப்பு மலருதாம்...

முத்துப்பல்லை காட்டிச் சிரிக்குதாம் 




அம்மா கோபம் பஞ்சாய் பறந்ததாம் 

பாப்பாவுக்கு பரிசு கிடைத்ததாம் 

விலைமதிப்பில்லா முத்த மழைதானாம்.....

அம்மாவுக்கு நிகர் அம்மாதான் 

கடவுள் நமக்கு தந்த சிறந்த பரிசுதான்

கண்ணுக்கு தெரியும் தெய்வம்தான் 

எப்போதும் நமக்கு பலம்தானாம் 

பொக்கிஷமாய் காப்போம் நாமும்தான்......


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)