வீட்டுச்சத்தம்!
Feb 04, 2026,01:42 PM IST
- க.யாஸ்மின் சிராஜூதீன்
வீட்டில் பாத்திரங்கள்
இருக்குதான்
சத்தம் என்பது
இயற்கைதான்
உப்புக்கரைசலாக
இருந்தாலே
தீர்வு கிடைக்கும்
தன்னாலே
வண்ணக் கரைசலாக
தெரிந்தாலே
பார்ப்போர் கண்ணை
கவர்ந்திடும்
வீடு இரண்டாய்
உடைந்திடும்
போர்க்களம் அங்கே
கண்டிடும்
நிம்மதி எங்கோ
பறந்திடும்
உறவு எல்லாம்
முறிந்திடும்
மனசெல்லாம்
காயம்தான்
ஆற ஆகும்
நாட்கள்தான்
நாட்கள் காற்றாய்
பறக்குதே
உள்ளம் பனியாய்
இருகுதே
வேதனை மட்டும்
மிச்சம்தான்
வாழ்க்கை ஒரு
வட்டம்தான்
வீம்பு அதிலே
எதற்குதான்
விட்டுக்கொடுத்து
வாழ்ந்திடு
கோடி இன்பம்
அடைந்திடு
வீட்டில் இன்பம்
தங்கிடும்
சிரிப்பு சத்தம்
மட்டும்தான்
இனி உனக்கு
சொந்தம்தான்
சொந்த பந்தம்
சூழ்ந்தால்தான்
வாழ்வில் சொர்க்கம்
உனக்குதான்....!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)