சிந்தனைச் சிதறல்.. மனதைக் கட்டுப்படுத்தும் எசமான்.. நாம்தான்!

Su.tha Arivalagan
May 26, 2026,03:22 PM IST

- அ. தாமஸ்


நம் மனதைக் கட்டுப்படுத்தும் எசமான் நாம்தான் என்பதில் உறுதியாக இருந்தால் நம்மைக் கட்டுப்படுத்தும் உறுதி இவ்வுலகில் எவருக்குமே இருக்காது.


எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள் அவ் வார்த்தைகள் இனிக்கும் என்பதற்காக அல்ல அவ்வார்த்தைகள் பலர் மனங்களை உங்களை நோக்கி ஈர்க்கும் என்பதற்காக. 


உழைப்பதில் மன உறுதியோடு இருங்கள்;காலம் கடந்த வெற்றியானாலும் அவ்வெற்றி மகிழ்ச்சிக்குரியது.ஏனெனில் அது நம் உழைப்பால் மட்டுமே விளைந்தது.




நாம் நல்லவனாக இருப்பது முக்கியம்தான் அதைவிட முக்கியம் சாணக்கியத்தனத்தோடு இருப்பது. ஆம் நாம் நல்லவன் என்பதற்காக மட்டுமே  எந்த ஒன்றும் எளிதாய் கிடைத்து விடுவதில்லை.


நாம் பிரச்சனைகளை சந்திக்கும் பொழுதே பலரின் முகமூடிகள் கிழித்தெறியப்படுகிறது. எனவே அவர்களின் உண்மை முகத்தை காண்பதற்காகவாவது நாம் பிரச்சனைகளை இன்முகத்தோடு சந்திப்போம்.சரி பிற கட்சிகளிலிருந்து திமுக, அதிமுகவுக்கு தாவி வந்த கடந்த கால தலைவர்களை ஒரு லிஸ்ட் எடுக்கலாம் வாங்க.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)