சிந்தனைச் சிதறல்.. நம்மில் ஏற்படும் மாற்றமே நிலையானது!

May 22, 2026,03:02 PM IST

- அ. தாமஸ்


மாற்றத்தை விரும்புகிறோம் ஆனால் நம்மை மாற்ற மறுக்கிறோம். நம்மில் ஏற்படும் மாற்றமே நிலையானது. எனவே யுகத்தை மாற்ற நினைக்காமல் முதலில் நம்மை மாற்ற நினைப்போம். நாம் மாறினால் இந்த யுகமும் நமக்கானதாய் மாறும்.


எந்த ஒன்றையும் பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள் நிச்சயமாக அது நாம் எதிர்பார்ப்பதைப் போல் இருக்காது. எனவே கிடைக்காத ஒன்றை எதிர்பார்த்து நம் நிம்மதியை சிதைக்காமல் இருப்போமே.


ஒவ்வொரு நாளும் இறைவனிடம் வாழும் வரம் கேட்கிறோம். இவ்வாழ்க்கையே ஒரு வரம் தான் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறோம்?.எனவே இவ் வாழ்க்கையே ஒரு வரம் தான் என நினைத்து தினம் அதன் மகிழ்வினில் திளைப்போம்.




உண்மையான மகிழ்ச்சியும் மனநிறைவும் நம் உறவிடம் இல்லை நம் உணர்வினில் இருக்கிறது.இதனை நம்மில் தேட மறுத்து நாம் உறவிலும், உலகிலும் தேடினால் எப்பொழுதும் நிறைவினைப் பெற முடியாது. 


எனவே இருப்பதில் நிறைவோம் இகமதில் மகிழ்வோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்