- அ. தாமஸ்
மாற்றத்தை விரும்புகிறோம் ஆனால் நம்மை மாற்ற மறுக்கிறோம். நம்மில் ஏற்படும் மாற்றமே நிலையானது. எனவே யுகத்தை மாற்ற நினைக்காமல் முதலில் நம்மை மாற்ற நினைப்போம். நாம் மாறினால் இந்த யுகமும் நமக்கானதாய் மாறும்.
எந்த ஒன்றையும் பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள் நிச்சயமாக அது நாம் எதிர்பார்ப்பதைப் போல் இருக்காது. எனவே கிடைக்காத ஒன்றை எதிர்பார்த்து நம் நிம்மதியை சிதைக்காமல் இருப்போமே.
ஒவ்வொரு நாளும் இறைவனிடம் வாழும் வரம் கேட்கிறோம். இவ்வாழ்க்கையே ஒரு வரம் தான் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறோம்?.எனவே இவ் வாழ்க்கையே ஒரு வரம் தான் என நினைத்து தினம் அதன் மகிழ்வினில் திளைப்போம்.

உண்மையான மகிழ்ச்சியும் மனநிறைவும் நம் உறவிடம் இல்லை நம் உணர்வினில் இருக்கிறது.இதனை நம்மில் தேட மறுத்து நாம் உறவிலும், உலகிலும் தேடினால் எப்பொழுதும் நிறைவினைப் பெற முடியாது.
எனவே இருப்பதில் நிறைவோம் இகமதில் மகிழ்வோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}