- கவிதாயினி டாக்டர் எஸ்.மணிமேகலை
பகலில் வீரனாய் தெரியும் ஆண்மகன்
இரவில் குழந்தையாய் மாறிடுவான்
கண்ணீர் அவனுக்குள் இல்லையா என்ன
கண்ணீரை மறைக்கத் தெரிந்தவன் அவன்
குடும்பத்திற்காக ஓயாது உழைப்பவன்
குதூகலம் என்று ஒன்றை அறியாதவன்
தான் பார்க்காததை தன் குழந்தையை பார்க்க வைப்பான்
தான் ஏங்கியதை தன் குழந்தைக்கு கிடைக்கச் செய்வான்

ஆண்மகன் என்ன அழுத்தக்காரனா
ஆண்மகன் என்ன ஆங்காரமானவனா
அன்பான சொல்லால் அணைத்துப் பாருங்கள்
ஆறுதல் வார்த்தையால் மனம் வருடி பாருங்கள்
முக்கிய நாட்களின் தேதிகளை மறதியால் தவறவிட்ட வில்லனாய் தோன்றலாம்
முக்கிய பொறுப்பை மறந்து விட்டதில் மன்னனாகவும் அவன் இருக்கலாம்
சிரிப்பை மறந்து சிந்தனையில் சிறகடிப்பவன்
சீரிய கொள்கை என்று அவனை சிறைப்படுத்தாதீர்
அவனது உலகமோ மிகச் சிறியது அவனது எண்ணமோ மிகப்பெரியது
அவனுக்குள்ளும் மஞ்சம் நிறைக்க காதல் உண்டு
அவனுக்குள்ளும் நெஞ்சம் நிறைய வலிகளும் உண்டு
ஆண் மகனின் குறைகளை எவரும் கேட்பதும் இல்லை
ஆண் மகனின் அழுகையை எவரும் பார்த்ததும் இல்லை
அவனை அவனாகவே வாழ விடுங்கள்
அதுவே நீங்கள் அவனுக்குச் செய்யும் நியாயங்கள்!
பெண் என்பவள்!!!!
கவர்ந்திழுக்கும் காந்தக்குரல்.. இசையரசி!
கக்கத்திலே குடம் தூக்கி கண்மாய்க்குப் போற புள்ளே!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
RIP S Janaki: இனியவளே! தாயே! இன்னிசைக் குயிலே!!
ஆயிரம் பாடல் பாடி, அமுதம் போல் தந்தவளே!
{{comments.comment}}