வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்

Jul 11, 2026,04:53 PM IST

சென்னை:கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதை பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். அதே வேளையில், வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானவர்களின் வாரிசுகளுக்கும் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விரிவான விவரம் பின்வருமாறு:


கரூர் நெரிசல் பாதிப்பு: 

கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு, உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கரூர் சம்பவத்தில உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கியதற்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும், விமர்சனமும் தெரிவித்தன. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 


அன்புமணி ராமதாஸின் முக்கிய கோரிக்கை :




இந்தத் திட்டத்தை வரவேற்றுப் பேசியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதே போன்ற ஒரு வரலாற்றுத் தேவையையும் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். கடந்த காலங்களில் வன்னியர் சமுதாயத்திற்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு போராட்டங்களின் போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களால் பலர் தங்களது இன்னுயிரை நீத்தனர்.


போராட்டக் களத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகளின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காட்டிய அதே மனிதாபிமானத்தை, சமூக நீதிப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


உதவிகள் தேவை : 

மேலும், வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் மட்டுமின்றி, தமிழகத்தில் உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் நடத்தப்பட்ட பல்வேறு காலகட்டப் போராட்டங்களில் பாதிக்கப்பட்டு, நலிவடைந்த நிலையில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு உரிய நிவாரணங்களையும், அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட உதவிகளையும் பாரபட்சமின்றி விரிவுபடுத்தி வழங்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Legacy of Captain Vijayakanth: விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்?

news

2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!

news

" கனிமவள கொள்ளைக்கு Fine போடுவார், கைது செய்வார்!" – ஆதவ் அர்ஜூனா அதிரடி பேச்சு

news

NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!

news

தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

news

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: CIDக்கு வழக்கு மாற்றம்

news

தமிழகத்திற்கு 9000 கனஅடி நீர் திறக்க வேண்டும்...காவிரி ஆணையம் உத்தரவு

news

Sudha's US Diary.. கலிபோர்னியா வந்தாச்சா.. எடு காரை.. விடு ஜூட்!

news

பரந்தூர் விமான நிலையத்திட்டம்...சட்டசபையில் நடந்த காரசார விவாதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்