- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
கக்கத்திலே குடம் தூக்கி கண்மாய்க்குப் போற புள்ளே
வெக்கத்திலே தலை குணுஞ்சு வேகமாக போறியடி
பக்கத்துல காவலுக்கு
பாதுகாப்பா நா வரவா
தண்ணீரை தூக்கி வந்து
தங்கத்துக்கு நான் தரவா
எட்டு வச்சு போறியடி
ஏண்டி ரொம்ப வேகமா

கட்டுச்சோறு கொண்டு வாரேன்
கண்ணே கொஞ்சம் பாரம்மா
தள்ளி நீயும் போகாதே
தங்கமே இன்னும் தூரமா
கொஞ்ச நேரம் உக்காரு
குளிர்ந்த நிழல் ஓரமா
சேர்ந்து நாமும் சாப்பிடுவோம்
சாதம் ரொம்ப ஜோர் அம்மா
பாசத்தோடு பேசிடுவோம் ரெண்டு பேரும் தீரமா
குடம் அலம்பி சேலை எங்கும் ஆகுமே ஈரமா
காஞ்சிபுரம் பட்டுச்சேலை வாங்கி நானும் தாரேமா
எவன் வந்தாலும் பாத்துக்கிறேன் எதிர்த்து தானே வீரமா
நல்ல கணவனாக ஆக்கிக்கிறேன் நானும் உன்னைத் தாரம் மா
விடியலாக வாழ்க்கையும் தான் மிளிரும் இங்கே பாரம்மா
வியந்து வியந்து பார்க்க வேணும் வீதியிலே ஊர் அம்மா
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
Tamil Poem: திமிரானவள்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
காதல் என்ற மூன்றெழுத்து
பெண் என்பவள்!!!!
கவர்ந்திழுக்கும் காந்தக்குரல்.. இசையரசி!
கக்கத்திலே குடம் தூக்கி கண்மாய்க்குப் போற புள்ளே!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
{{comments.comment}}