- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
கக்கத்திலே குடம் தூக்கி கண்மாய்க்குப் போற புள்ளே
வெக்கத்திலே தலை குணுஞ்சு வேகமாக போறியடி
பக்கத்துல காவலுக்கு
பாதுகாப்பா நா வரவா
தண்ணீரை தூக்கி வந்து
தங்கத்துக்கு நான் தரவா
எட்டு வச்சு போறியடி
ஏண்டி ரொம்ப வேகமா

கட்டுச்சோறு கொண்டு வாரேன்
கண்ணே கொஞ்சம் பாரம்மா
தள்ளி நீயும் போகாதே
தங்கமே இன்னும் தூரமா
கொஞ்ச நேரம் உக்காரு
குளிர்ந்த நிழல் ஓரமா
சேர்ந்து நாமும் சாப்பிடுவோம்
சாதம் ரொம்ப ஜோர் அம்மா
பாசத்தோடு பேசிடுவோம் ரெண்டு பேரும் தீரமா
குடம் அலம்பி சேலை எங்கும் ஆகுமே ஈரமா
காஞ்சிபுரம் பட்டுச்சேலை வாங்கி நானும் தாரேமா
எவன் வந்தாலும் பாத்துக்கிறேன் எதிர்த்து தானே வீரமா
நல்ல கணவனாக ஆக்கிக்கிறேன் நானும் உன்னைத் தாரம் மா
விடியலாக வாழ்க்கையும் தான் மிளிரும் இங்கே பாரம்மா
வியந்து வியந்து பார்க்க வேணும் வீதியிலே ஊர் அம்மா
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}