- வே.ஜெயந்தி
காதல் என்ற மூன்றெழுத்து,
கண்களில் நாணம் பூக்கும் சொத்து.
சிறியவர் முதல் பெரியவர் வரை,
சிந்தையில் மலரும் இனிய நிறை.
காதல் என்பது ஓர் ஈர்ப்பு,
கனவுகளுக்கு தரும் உயிர்ப்பு.

தேனீக்கு மலர் மேல் காதல் போல,
மனமும் தேடும் அன்பின் சோலை.
காதல் வரும் நேரம் வந்தால்,
வில்லையும் மனிதன் வளைப்பான் தானே.
வானத்தையும் அளப்பான் துணிந்து,
வாழ்க்கையை மாற்றுவான் மகிழ்ந்து.
கடலையும் தாண்டும் அந்த உணர்வு,
கல்லான இதயத்துக்கும் தரும் கனிவு.
காதல் ஒரு மாய உலகம்,
காயங்களையும் ஆற்றும் சொர்க்கம்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}