காதல் என்ற மூன்றெழுத்து

Jul 13, 2026,01:11 PM IST

- வே.ஜெயந்தி


காதல் என்ற மூன்றெழுத்து,

கண்களில் நாணம் பூக்கும் சொத்து.


சிறியவர் முதல் பெரியவர் வரை,

சிந்தையில் மலரும் இனிய  நிறை.


காதல் என்பது ஓர் ஈர்ப்பு,

கனவுகளுக்கு தரும் உயிர்ப்பு.




தேனீக்கு மலர் மேல் காதல் போல,

மனமும் தேடும் அன்பின் சோலை.


காதல் வரும் நேரம் வந்தால்,

வில்லையும் மனிதன் வளைப்பான் தானே.


வானத்தையும் அளப்பான் துணிந்து,

வாழ்க்கையை மாற்றுவான் மகிழ்ந்து.


கடலையும் தாண்டும் அந்த உணர்வு,

கல்லான இதயத்துக்கும் தரும் கனிவு.


காதல் ஒரு மாய உலகம்,

காயங்களையும் ஆற்றும் சொர்க்கம்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்