- வே.ஜெயந்தி
காதல் என்ற மூன்றெழுத்து,
கண்களில் நாணம் பூக்கும் சொத்து.
சிறியவர் முதல் பெரியவர் வரை,
சிந்தையில் மலரும் இனிய நிறை.
காதல் என்பது ஓர் ஈர்ப்பு,
கனவுகளுக்கு தரும் உயிர்ப்பு.

தேனீக்கு மலர் மேல் காதல் போல,
மனமும் தேடும் அன்பின் சோலை.
காதல் வரும் நேரம் வந்தால்,
வில்லையும் மனிதன் வளைப்பான் தானே.
வானத்தையும் அளப்பான் துணிந்து,
வாழ்க்கையை மாற்றுவான் மகிழ்ந்து.
கடலையும் தாண்டும் அந்த உணர்வு,
கல்லான இதயத்துக்கும் தரும் கனிவு.
காதல் ஒரு மாய உலகம்,
காயங்களையும் ஆற்றும் சொர்க்கம்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
Tamil Poem: திமிரானவள்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
காதல் என்ற மூன்றெழுத்து
பெண் என்பவள்!!!!
கவர்ந்திழுக்கும் காந்தக்குரல்.. இசையரசி!
கக்கத்திலே குடம் தூக்கி கண்மாய்க்குப் போற புள்ளே!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
{{comments.comment}}