- டிலாணி ஸ்ரீதரன்
விழிகளில் சொரியும் கண்ணீரின் சொந்தமா?
அடிகளையும் ஏற்கும் பொறுமையின் சின்னமா?
அழிவுகளையும் தாங்கும் சக்தியின் திண்ணமா?
உயிர்களை உமிழும் உதிரத்தின் உறைவிடமா?
எதையும் சகித்துத் துடிக்கும் இதயமா?
உதையும் வாங்கும் கணவனின் கிண்ணமா?

பாதையையும் சீராக்கும் வாழ்வின் முன்னேற்றமா?
போதையையும் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமா?
உபாதையிலும் உயிரோட்டமான உலாவும் இயந்திரமா?
வித்தைகள் பல கற்று விற்பனையாகும் வீரியமா?
துளிரும் மழலைகளை கருவறுப்பது நியாயமா?
வாழ்வை சிதைத்து எதிர்காலத்தை அழிப்பது மூடர் கூட்டமா?
தேகத்தை வதைத்து பிறவியை பறிக்கும் அற்பர்களின் இராச்சியமா?
பேதை இவளை புரிந்து கொண்டாள் குற்றமா?
மலர்களின் மணத்தை
மனதால் முகர்ந்தால் பாவமா?
மாதர்களின்றி இவ்வுலகமில்லை என்பதுதான் புரியுமா?????
Tamil Poem: திமிரானவள்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
காதல் என்ற மூன்றெழுத்து
பெண் என்பவள்!!!!
கவர்ந்திழுக்கும் காந்தக்குரல்.. இசையரசி!
கக்கத்திலே குடம் தூக்கி கண்மாய்க்குப் போற புள்ளே!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
{{comments.comment}}