- டிலாணி ஸ்ரீதரன்
விழிகளில் சொரியும் கண்ணீரின் சொந்தமா?
அடிகளையும் ஏற்கும் பொறுமையின் சின்னமா?
அழிவுகளையும் தாங்கும் சக்தியின் திண்ணமா?
உயிர்களை உமிழும் உதிரத்தின் உறைவிடமா?
எதையும் சகித்துத் துடிக்கும் இதயமா?
உதையும் வாங்கும் கணவனின் கிண்ணமா?

பாதையையும் சீராக்கும் வாழ்வின் முன்னேற்றமா?
போதையையும் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமா?
உபாதையிலும் உயிரோட்டமான உலாவும் இயந்திரமா?
வித்தைகள் பல கற்று விற்பனையாகும் வீரியமா?
துளிரும் மழலைகளை கருவறுப்பது நியாயமா?
வாழ்வை சிதைத்து எதிர்காலத்தை அழிப்பது மூடர் கூட்டமா?
தேகத்தை வதைத்து பிறவியை பறிக்கும் அற்பர்களின் இராச்சியமா?
பேதை இவளை புரிந்து கொண்டாள் குற்றமா?
மலர்களின் மணத்தை
மனதால் முகர்ந்தால் பாவமா?
மாதர்களின்றி இவ்வுலகமில்லை என்பதுதான் புரியுமா?????
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}