- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
கவர்ந்திழுக்கும்
காந்தக்குரல்
மனம் மயக்கும்
மந்திரக் குரல்
உயிர் உருக்கும்
உன்னதக் குரல்
குயிலைப் போல்
இனிமைக் குரல்

சிரித்தே மயக்கும்
மாயக்குரல்
சிணுங்கியே
கிறக்கும்
செல்லக் குரல்
கேட்டாலே கிறுகிறுக்க வைக்கும் குரல்
மனதை வருடும்
மழலைக் குரல்
காதல் பொழியும்
காவியக் குரல்
கிளுகிளுப்பூட்டும்
காமக்குரல்
இத்தனைக்கும்
சொந்தக்குரல்
எஸ் ஜானகியின்
ஞானக்குரல்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}