RIP S Janaki: இனியவளே! தாயே! இன்னிசைக் குயிலே!!

Jul 12, 2026,12:29 PM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன் 


இன்று வானம் இருண்டது,

பூமி சிவந்தது.


இனியவளே! தாயே!  இன்னிசைக் குயிலே!!


இசை உலகை ஆண்டு வந்த மகாராணி நீ,


ஓசையின்றி துயில ஏன் இந்த அவசரம்?


அன்பே உன் மொழி,

இசை உந்தன் மூச்சு,


மலர்ந்த முகத்தில்

அந்த சிரிப்பு,




இனியும்  உன் குரல் ஒலித்துக்

கொண்டே ,


பனி மழை போல்

பெய்து கொண்டே,


என்றென்றும்

தென்றல் போல்

வீசிக் கொண்டே,


உணர்வுகளில்

ஒட்டிக் கொண்டே,


இதயங்களில்

பாடிக் கொண்டே,


சரித்திரம் பேசும்

கான தேவதை நீ!


உன் மலர்படுக்கையில்

 சின்னக் கண்ணன் மடியில் என்றும்

அமைதியாக உறங்கு தாயே !


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்