- விஜயலக்ஷ்மி கண்ணன்
இன்று வானம் இருண்டது,
பூமி சிவந்தது.
இனியவளே! தாயே! இன்னிசைக் குயிலே!!
இசை உலகை ஆண்டு வந்த மகாராணி நீ,
ஓசையின்றி துயில ஏன் இந்த அவசரம்?
அன்பே உன் மொழி,
இசை உந்தன் மூச்சு,
மலர்ந்த முகத்தில்
அந்த சிரிப்பு,

இனியும் உன் குரல் ஒலித்துக்
கொண்டே ,
பனி மழை போல்
பெய்து கொண்டே,
என்றென்றும்
தென்றல் போல்
வீசிக் கொண்டே,
உணர்வுகளில்
ஒட்டிக் கொண்டே,
இதயங்களில்
பாடிக் கொண்டே,
சரித்திரம் பேசும்
கான தேவதை நீ!
உன் மலர்படுக்கையில்
சின்னக் கண்ணன் மடியில் என்றும்
அமைதியாக உறங்கு தாயே !
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}