எந்த மலரும் சொல்லிக் கொள்வதில்லை!

Su.tha Arivalagan
Aug 10, 2026,12:49 PM IST

- அமிர்தம் ரமேஷ்


எந்தெந்த

மலர்களில்

இருந்து

சேகரித்தது


பிரித்தறியா

வண்ணம்


சேமித்து

வைக்கிறது

தேனீக்கள்


ஒற்றை

ஆளாய் 

அபகரித்து




விற்பனை

செய்கிறார்

தேன் 

வியாபாரி


எந்த மலரும்

சொல்லிக்

கொள்வதில்லை

தன்னில்

இருக்கும்

தேன் 

சுவையென்று


தன்னிடமே

சுத்தமான

தேன்

கிடைக்குமென்று

பீற்றிக்

கொள்கிறார்

வியாபாரி


இங்கு

தேனீக்களின்

பங்கு

என்னவாயிற்று..?