இது தீராத தாகம்!
Jul 07, 2026,12:11 PM IST
- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
நீலவண்ண
மேகமென
கடல் மீது
மோகம் கொண்டு
காதலோடு
கால் பதிக்க
வந்தவளே
கடல் அலையை
ரசிக்க வந்தேன்
கன்னி உன்
அழகில்
மயங்கிப் போனேன்
கடல் அலையா
இல்லை உன்
கூந்தல்
அலைபாயும்
காட்சியா
மனதில் பதிய மறுக்கிறது
கற்பனையை
தூண்டும்
காரிகையே
உன் பாத கொலுசின்
ஓசையா
இல்லை
அலை கடலின்
ஆர்ப்பரிக்கும்
ஓசையா
இயற்கையின்
படைப்பில்
வியந்துதான்
போகிறேன்
என்னை
கவிஞனாக்கிய
அழகு
தேவதையே
கடலோரம்
கால் பதித்திடவே
உனை தழுவிச்
செல்ல அலைகளுக்கும்
போட்டியடி
அலைபாயும்
கடலோடு
நுரைமிதக்கும்
கரையோடு
மண் அரித்துச் செல்லும் காலோடு
ஆனந்தமாய்
நிற்கும்
உன்னோடு
என்னோடு கொஞ்சம்
உறவாடிச் சென்றது
என் பேனா
உன்னை
வர்ணித்து
என்னை
கவிஞனாக்கி
இன்னும் தீராத
கரைமோதுகிறதோ...!