ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 9 பேர் உயிரிழப்பு

Su.tha Arivalagan
Nov 01, 2025,01:24 PM IST

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் கோவில் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


ஆந்திர மாநிலம் காசிபுக்கா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். ஐப்பசி மாதம் மற்றும் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பல பெண்கள் அடங்குவர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த துயர சம்பவம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நிகழ்ந்துள்ளது. ஏகாதசி தினத்தை ஒட்டி, வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இந்த திடீர் கூட்ட நெரிசலால், பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர். இதனால் பலர் காயமடைந்தனர்.




சம்பவத்தின் போது, ​​கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது இந்த துயரம் நிகழ்ந்தது. உயிரிழந்தவர்களில் பல பெண்கள் அடங்குவர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.