காலுக்கு மிஞ்சி இடும் காலம் தொலைவில் இல்லையடி

Su.tha Arivalagan
Jul 25, 2026,02:05 PM IST

- கவிஞர் பி எஸ் முருகேசன்


அசைந்து நடக்கும் போது 

ஆசை நாயகி


ஓசை நயம் கொடுக்கிறது 

கொலுசு தானடி


மருதாணி அழகு 

என்னை மயக்குதடி


மறைந்திருக்கும் மஞ்சள் முகம் இழுக்குடி


பளபளப்பாய் ஓ வரவை 

பார்க்கும் போது




பாடல் வரி இதயத்திலே 

உதிக்குதடி


வளையல் இடும் ஓசையும் சேரும்போது


வல்லினமாய் வார்த்தைகளும் பிறக்குதடி


கன்னி உன்னை மனது 

எண்ணும் போது


காற்று வந்து என்னை 

கட்டி அணைக்கு தடி


மெட்டி இல்லாக் குறை 

ஒன்றை சுட்டிக் காட்டி


காற்றும் மெதுவாக 

என் தலையில் குட்டு தடி


காலுக்கு மிஞ்சி இடும் 

காலம் தொலைவில் இல்லையடி


காரிகையே கணப்பொழுது போதுமடி


கண்டிப்பாக திருமணம் 

கூடுமடி


மனம் இரண்டும் ஒன்றாக 

சேருமடி 


மகிழ்ச்சியுடன் தாளம் 

போடும்படி


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)