விடியலைத் தாடி

Jul 24, 2026,03:23 PM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


பாத்தாலும் பாத்தேனடி 

பாதகத்தி ஒன்னே


பம்பரம் போல் சுழன்று வந்து பாதையிலே நின்னேன்


மெத்தையிலே நின்னவளை 

எக்கி எக்கி பாத்தேனே


அத்தை மக

அழகி இன்னு

ஆவலோடு சொன்னேனே


சொத்து சொகம் 

தேவையில்லை 

சொந்தம் நீ போதுமே




தாய்மாமன் பெத்தவளே 

தங்கம் வந்து சேருமே


வங்கக் கடல் அலையும் 

வசந்தம் கூட வீசுமே


சிங்கப் பெண் நீ நடந்தால் 

சிகரமும் போற்றுமே


குடகு மலைத் தென்றலும் 

கொங்கு தமிழ் பேசுமே


தென் பொதிகை சந்தன வாசம்

தெருவெங்கும் மணம் வீசுமே


மண்ணின் மணம் கலந்த 

மலைமகளே மகராசி


மதிப்பில் அடங்காத 

மாணிக்கம் முகராசி


கொள்ளை கொள்ளும் 

மனமே கோடி திரவியமே


ராகத்தில் தோடி 

ரம்மியமாகப் பாடி


விரைந்து நீ வாடி

விடியலைத் தான் தாடி


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்