சற்றே...!
Feb 07, 2026,03:57 PM IST
- பா.பானுமதி
ஓடி கொண்டே இராதே
சற்றே
ஓய்வு எடுத்துக் கொள்
ஓவியமாக ஒளிரும் பொழுது
தேடி கொண்டே இராதே
சற்றே
திரும்பி பார் திருத்தமான காட்சிகள் தென் படும்
ஆடி கொண்டே இராதே
சற்றே
அமைதி கொள் அமைதியில் தான் ஆனந்தம் தெரியும்
நாடி கொண்டே இராதே
சற்றே
இளைப்பாற செய்
நாடி நரம்புகள் நலம் பலம் பெறும்
ஊடிக்கொண்டே இராதே சற்றே
கூடி இரு கூடுதலாக ஆயுள் கிடைக்கும்
சாடி கொண்டே இராதே சற்றே
சமாதானம் கொள் நாள்கள் சாமரம் வீசும்
வாசம் வீசு வசந்தம் பேசும்
சரியா.... சற்றே கேட்டு தான் பாரேன்
சங்கீதம்....!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)