பழி சொல்லாத நிழல் நீ .. நட்பு!

Su.tha Arivalagan
Aug 03, 2026,11:31 AM IST

ரத்தம் இல்லாத உறவு நீ  

விழும் போது தூக்கி விடும் கரம் நீ  

சிரிக்க வைக்கும் மருந்து நீ  

அழும் போது தோள் கொடுப்பவனும் நீ  




பணம் கேட்காத பங்கு நீ  

பழி சொல்லாத நிழல் நீ  

இந்த வாழ்கையின் அழகே நீ  

நண்பா... நீ இல்லாமல் நான் இல்லை  


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)