Real Story: மாண்புமிகு மனைவி!

Su.tha Arivalagan
May 28, 2026,03:11 PM IST
- பாரதிராஜன்

பெண் பார்க்க போகும் போது படையுடன் செல்லும் கணவர் வீட்டாரைக்கண்டு மிரளாதவள் மனைவி!

புகுந்த வீட்டில் கைப்பிடித்தவன் மட்டுமல்ல மாமானார், மாமியார், மைத்துனர், நாத்தனாரை சரிகட்டி தன் மீது எந்த பழிச் சொல்லும் வராமல் காப்பவள் மனைவி!

கணவனின் உடன்பிறப்பு திருமணம், சீர்வரிசை செய்து கணவன் பேரை க்காப்பது மனைவி தானே!கணவன் உடல் நிலை சற்றே குறைய அதனை சரி செய்வது மனைவி மட்டுமே!

தன் குழந்தைகளின் மனமறிந்து நடப்பது மனைவி மட்டுமே!
மருமகள் வந்தாலும் 
மகள் மருமகளானாலும்
மனைவி சொல்லே மந்திரம் என்பது 
எழுதப்படாத சொலவடை!



மனைவி தான் சுமங்கலியாகப் போகவே விரும்புவாள்!

அம்மாதிரியே  என்மனைவி 
என்னை விட்டு போக
நேர்ந்தது இறைவன்
செயல் அன்றி வேறுஏது?
தன் இரு கண்களை அவள் விரும்பிய படியே தானம் செய்தேன்.!

(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)