சிந்தனைச் சிதறல்.. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்க்கலாமா?

Su.tha Arivalagan
Jul 30, 2026,01:24 PM IST

- அ. தாமஸ்


தகுதியானவற்றை தகுதியானவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது தான் சரியானது. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தானே கொடுக்கும்.எனவே இத்தகையவர்களிடம் இவர்கள் இப்படித்தான் என்று கடந்து போங்கள் மகிழ்ச்சி நிரந்தரமாகும். 


பொன்னோ பொருளோ அவை மதிப்புப் பெறுவது இடத்தையும் தேவையையும் பொறுத்தே; மனிதர்களும் தேவையை பொருத்தே மதிக்கப்படுகிறார்கள் தேவையில்லாத இடங்களில் மிதிக்கப்படுகிறார்கள்.




உங்களின் நிலையில் நீங்கள் உறுதியாக இருங்கள் பிறர் மதிக்கவில்லை என்பதற்காக உங்கள் மதிப்பு குறைந்து விடுவதில்லை. உங்களின் மதிப்பு அறியப்படும் பொழுது நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். 


தெய்வங்கள் கூட அவை நம் தேவை நிறைவேற்றும் தன்மையைப் பொறுத்தே மதிக்கப்படுகிறது;அப்படி இருக்க மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? எனவே உங்களின் மதிப்பை உணர்ந்திடுங்கள், அதன் நிலையில் தினம் மகிழ்ந்திடுங்கள்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)