- அ. தாமஸ்
உதவி கேட்பவருக்கும் கேட்க முடியாமல் தவிப்பவருக்கும் உதவுவதில் உறுதியாய் இருங்கள். உதவி வேண்டுபவருக்கு உடன் மறுப்பதை விட பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தையை மட்டுமாவது கூறுங்கள் அது கூட அவர்களுக்கு ஆகச்சிறந்த ஆறுதல் அளிக்கும்.
இன்று பெரும் நிலையில் இருந்தவர்கள் நாளை கொடுக்கும் நிலைக்கு கூட உயரலாம். ஆம் அவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது உதவியை விட உடன் இருத்தலைத்தான்.
தேவைக்கு மட்டும் உதவுங்கள். தேவைப்படும் பொழுதெல்லாம் உதவினால் அந்த உதவியே அவர்களை உழைப்பை மறந்தவர்களாகவும் உதவியை மட்டுமே தேடுபவர்களாகவும் மாற்றிவிடும்.

தேவையில் இருப்பவருக்கு அவர்களின் தேவை உணர்ந்து உதவுங்கள். ஆம் மரங்கள் கூட நிழல் வேண்டுபவருக்கு கனியையும் கனி வேண்டுபவருக்கு நிழலையும் கொடுப்பதில்லை தானே.
உதவுங்கள் உங்களின் உதவி உதவி பெறுபவரை அந்நிலையில் இருந்து கடத்தி உதவி வழங்கும் நிலைக்கு உயர்த்தும் வகையில் உதவுங்கள். ஆம் உதவி என்பது பெறுவதுடன் நிறுத்துவதற்கு அல்ல தொடர்ந்து நம் நிலையில் கடத்துவதற்கே.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
சிந்தனைச் சிதறல்.. பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தை.. ஆகச்சிறந்த ஆறுதல்!
இன்னுயிர் நீ என் அருகில் வா!
கோடு தாண்டாத தூரம்!
செலவு போல தீர்ந்து போகும் வாழ்க்கையும் தான்!
பெண் என்பவள்
Short Story: நீக்கறதா.. வேண்டாமா?
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
{{comments.comment}}