சிந்தனைச் சிதறல்.. பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தை.. ஆகச்சிறந்த ஆறுதல்!

Jul 29, 2026,03:13 PM IST

- அ. தாமஸ்


உதவி கேட்பவருக்கும் கேட்க முடியாமல் தவிப்பவருக்கும் உதவுவதில் உறுதியாய் இருங்கள். உதவி வேண்டுபவருக்கு உடன் மறுப்பதை விட பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தையை மட்டுமாவது  கூறுங்கள் அது கூட அவர்களுக்கு ஆகச்சிறந்த ஆறுதல் அளிக்கும். 


இன்று பெரும் நிலையில் இருந்தவர்கள் நாளை கொடுக்கும் நிலைக்கு கூட உயரலாம். ஆம் அவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது உதவியை விட உடன் இருத்தலைத்தான்.


தேவைக்கு மட்டும் உதவுங்கள். தேவைப்படும் பொழுதெல்லாம் உதவினால் அந்த உதவியே அவர்களை உழைப்பை மறந்தவர்களாகவும் உதவியை மட்டுமே தேடுபவர்களாகவும் மாற்றிவிடும்.




தேவையில் இருப்பவருக்கு அவர்களின் தேவை உணர்ந்து உதவுங்கள். ஆம் மரங்கள் கூட நிழல் வேண்டுபவருக்கு கனியையும் கனி வேண்டுபவருக்கு நிழலையும் கொடுப்பதில்லை தானே. 


உதவுங்கள் உங்களின் உதவி உதவி பெறுபவரை அந்நிலையில் இருந்து கடத்தி உதவி வழங்கும் நிலைக்கு உயர்த்தும் வகையில் உதவுங்கள். ஆம் உதவி என்பது பெறுவதுடன் நிறுத்துவதற்கு அல்ல தொடர்ந்து நம் நிலையில் கடத்துவதற்கே.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்