- சசிகலா விஸ்வநாதன்
எந்நாளும் அன்னை சொல் கேள்;
துணையாள் சொல்படி நட.
நாளும் தடை பல வந்திடினும்;
தார வழியே தேர்.
மனவி மணம் கோணாது இருக்க;
மணவாழ்க்கை மணம் பெறும்.
சிறியதில் நலமாய் விட்டுக் கொடுக்க;
பெரியதில் வெற்றி காண்.

அயலார் முன் நங்கையை ஏற்றிவைக்க;
வாய்க்கும் வீட்டில் நிம்மதி.
அரசு வேலை அமைந்தவள் வாய்க்க;
புதுமனை புகுதல் எளிது
தன் தாயிடத்தில் கருத்து உள்ளவன்;
தன் நங்கைக்கும் நல்லவனாவான்
மனைவியிடத்தில் குரல் உயர்த்தி பேசாதவனுக்கே;
இனிமையான வாழ்வு அமையும்
அடுப்படியில் மனைவிக்கு ஆற்றும் உதவி;
அவளுடன் சேர்ந்து உணவருந்த, தீருமே;
அன்றைய மனவாட்டம் அப்போதே!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
வாயை மூடு
உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
{{comments.comment}}