மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

Sep 15, 2026,10:37 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


எந்நாளும் அன்னை சொல் கேள்;

துணையாள் சொல்படி  நட.


நாளும் தடை பல வந்திடினும்;

தார வழியே தேர்.


மனவி மணம் கோணாது இருக்க;

மணவாழ்க்கை மணம் பெறும்.


சிறியதில் நலமாய் விட்டுக் கொடுக்க;

பெரியதில் வெற்றி காண்.




அயலார் முன் நங்கையை  ஏற்றிவைக்க;

வாய்க்கும் வீட்டில் நிம்மதி.


அரசு வேலை அமைந்தவள் வாய்க்க;

புதுமனை புகுதல் எளிது


தன் தாயிடத்தில் கருத்து உள்ளவன்;

தன் நங்கைக்கும் நல்லவனாவான்


மனைவியிடத்தில் குரல் உயர்த்தி பேசாதவனுக்கே;

இனிமையான வாழ்வு அமையும்


அடுப்படியில் மனைவிக்கு ஆற்றும் உதவி;

தடுக்கும் பல ஊடல்களை.


அவளுடன் சேர்ந்து உணவருந்த, தீருமே;

அன்றைய மனவாட்டம் அப்போதே!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்