தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

Sep 15, 2026,10:49 AM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன், திண்டுக்கல்


சுத்தி சுத்தி நீந்துகிற நெத்திலி மீனே

ஓ சுறுசுறுப்பை பாத்து பாத்து 

வியக்கிறேன் நானே


ஒத்துமையா சேர்ந்து 

சேர்ந்து உலா வருகிறே

ஒன்னை விட சிறிய மீனை உண்ணு வாழுகிறே


தண்ணிக்குள்ள ராஜா 

தான்

தவழுகிறே மாசு தான்


வலை விரிச்சு அள்ளி வந்தா

வரவு கொஞ்சம் காசுதான்


காஞ்சு போன கருவாடும் 

காசாகுது

தீஞ்சு போன 

பலகாரம் தெருவில் கிடக்குது




மேஞ்ச மாடு புல்லை 

முதுகில் சுமக்குமா?

மேடையிலே பாடும் ராகம் 

மெட்டு குறையுமா?


ஓடையிலே போகும் நதி

ஓய்வு தேடுமா?

ஓய்ந்து போன காற்று 

மீண்டும் வீச மறுக்குமா?


இரவு வரும் என்பதனால் 

விடிய மறுக்குமா

இருக்கும் போதும் இன்னும் தேட

வாழ்க்கை சிறக்குமா?


இருப்பது போதும் என்று 

இயல்பாக நினைத்தால் 

இன்பம் கூட இமயம் போல வந்து உன்னை 

அணைக்கும்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்