- கவிஞர் பி.எஸ். முருகேசன்
காச்சுக் கிடக்குதடி
கத்திரிக்காய் செடியிலே
பூச்சி இல்லாமே புடுங்கி வாடி
சின்னப் பொண்ணு மடியிலே
அறுத்து கொழம்பு வச்சா
வேகுமடி நொடியிலே
அற்புதமாய் நறுமணக்கும்
அறுசுவை உணவிலே
கருத்து மிகுந்தவளே
கருத்துக்காளை மருமகளே
உருத்தான சொந்தம் நீ
உசுரான பந்தம் நீ

பாசம் கொறையாத
பத்தரை மாத்து தங்கம் நீ
அன்போடு உபசரிக்கும்
அட்சய பாத்திரம் நீ
அச்சமின்றி சொல்வேன்
அச்சாணி நீ என்று
உச்சாணிக் கொம்பில்
உன்னை வைத்தல் நன்று
மச்சான் ஏ மனசிலே
மகுடம் போல நீ
சிகரம் போல
மின்னுகிறே
சீக்கிரமா வா நீ
சிறகடித்து பறப்போம்
காதல் வானில்
சிந்தை குளிரட்டும்
சிறப்புடன் இளவேனில்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
{{comments.comment}}