- டிலாணி ஸ்ரீதரன், பதுளை, இலங்கை
மாறாத உலகினிலே
மதவெறியுடன் அவலங்களும் அவதாரமெடுக்கும்!
ஆறாத காயங்களிலே
ஆழமாய் துளையிட்டு எரிவெடுக்கும்!
தீராத சோதனையாய்
தீந்தமிழும் திட்டுவதில் பொலிவிழக்கும்!
கூறாத பேச்சுகளும்
கூட்டத்தோடு வேடிக்கையாய் கும்மியடிக்கும்!

மறையாத வடுக்களும்
மனமதில் திடமாக தைத்திருக்கும்!
குறையாத பிரச்சனைகளுக்காக
குடிசைகளையும் குணமிழந்து பற்றவைக்கும்!
தெரியாத மொழிகளும்
தெள்ளுத்தமிழை தேவையற்று இசைக்கும்!
முறியாத சொந்தங்களும்
முட்டிமோதி பிரிவுகளை தேர்ந்தெடுக்கும்!
அறியாத குழந்தைகளும்
கலவரத்தில் அனாதைகளாய் பிறப்பெடுக்கும்!
புரியாத இனவெறி
புயலாய் மண்ணுயிர்களையும் கருவறுக்கும்!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
{{comments.comment}}