- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
தேசம் விட்டு தேசம் போய்
திரவியம் தேடு
தேவை நெறஞ்சதுனா
திரும்பிடு நாடு
தேவை தேவையென்று
தேடுதல் தொடர்ந்தா
ஓடு ஓடு என்று
காலமும் கடந்தா
செலவு போல தீர்ந்து போகும்
வாழ்க்கையும் தான்
பிள்ளை குட்டி பாசம் எல்லாம் போக்கியம் தான்

அயல் நாட்டில்
ஐக்கியம் ஆனாய்
அப்பாவை அறியாத
பிள்ளைகளுக்கு ஆளானாய்
செல்லில் பேசி
செல்லில் சிரிக்கும்
ஜீ பூம்பா வேலை
எத்தனை நாளைக்கு
வீதியிலே விளையாடும்
விருப்பம் கனவு
அப்பாவின் மடியில்
அமர்வதும் கனவு
குடும்பம் கூடி
மகிழ்வதும் கனவு
பள்ளியில் விட
பயணிக்கும் கனவு
இத்தனை கனவு
எத்தனை ஏக்கம்
ஏங்கும் மனசிலே
இருக்காதா தாக்கம்
எத்தனை நாட்கள்
பறந்தன தூக்கம்
மறக்க நினைத்தால்
மனது வலிக்கும்
கன்றைத் தேடும்
தாய்ப் பசு
நாங்கள் பசுவைத்
தேடும் கன்றாக
வாருங்கள் இணைவோம்
நாம் ஒன்றாக
வாழ்வோம் இணைந்து
நன்றாக
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
சிந்தனைச் சிதறல்.. பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தை.. ஆகச்சிறந்த ஆறுதல்!
இன்னுயிர் நீ என் அருகில் வா!
கோடு தாண்டாத தூரம்!
செலவு போல தீர்ந்து போகும் வாழ்க்கையும் தான்!
பெண் என்பவள்
Short Story: நீக்கறதா.. வேண்டாமா?
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
{{comments.comment}}