சென்னை: சென்னையில் சென்னை கலங்கரை விளக்கம் - பட்டினப்பாக்கம் (Foreshore Estate) கடற்கரைச் சாலையில் அமையவுள்ள புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத் திட்டத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் 25.55 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 அடுக்கு மாடிகளுடன் கூடிய பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தான், இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ஜெயக்குமார், "கட்டியே தீருவேன் என முதலமைச்சர் நினைத்தால் மக்கள் விடமாட்டார்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது குற்றச்சாட்டுகள் மற்றும் முக்கிய கருத்துகள்:

மக்கள் எதிர்ப்பு & வாழ்வாதாரம்: பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைந்தால், அப்பகுதியைச் சுற்றியுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் நசுக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் & கட்டுப்பாடுகள்: பட்டினப்பாக்கம், சாந்தோம் மற்றும் கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் ஏற்கனவே கடுமையான வாகன நெரிசல் நிலவுகிறது. அங்கு தலைமைச் செயலகம் வந்தால் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
மாற்றுத் திட்டம்: சென்னை நகருக்குள்ளேயே நெரிசலை அதிகரிப்பதற்குப் பதிலாக, நகருக்கு வெளியே ஏதேனும் ஒரு செயற்கைக்கோள் நகரத்தை (Satellite Town) உருவாக்கி, அங்குப் பிரம்மாண்ட தலைமைச் செயலகத்தைக் கட்டலாம் எனப் பரிந்துரைத்தார்.
மருத்துவமனையாக மாறும் நிலைமை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கடந்த காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம், பின்னர் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர், "ஒருவேளை அனைத்து எதிர்ப்புக்களை மீறி இங்கு தலைமை செயலகம் கட்டினால், அது பின்னாளில் வட சென்னையில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போல், தென் சென்னைக்கான புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத்தான் மாறும்" என விமர்சித்தார்.
இத்திட்டத்திற்கு மீனவ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
வாயை மூடு
உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!
{{comments.comment}}