உண்மைக் காதலோடு உறவாடி.. காதலர் தினத்தைக் களிப்போடு கொண்டாடி!
- வி.ஆர். விஜயலட்சுமி
காதல் என்பது அன்பு
காதல் என்பது பாசம்
காதல் என்பது நேசம்
காதல் என்பது கருணை
காதல் என்பது அனுசரனை
அதனால்
தாயிடத்தில் காதல் செய்.
தந்தையிடத்தில் காதல் செய்
தமக்கை இடமும் காதல் செய்
தனயன் இடத்தில் காதல் செய்.
தகுந்தோர் இடத்தில் காதல் செய்..
தன்னிடத்தில் காதல் செய்
உன்னிடத்திலே காதல் செய்
உயிர்கள் அனைத்திடமும் காதல் செய்
உவகையாக காதல் செய்
மனிதனிடத்தில் மனிதனும்
மனைவியிடத்தில் கணவனும்
கதிரவனிடத்தில் கோள்களும்
மேகத்தின் இடத்தில் நீர் துளியும்
வானத்தினிடத்தில் கரு மேகங்களும்
பூமியின் இடத்தில் நிலவும்.
இயற்கையிடத்தில் ஆர்வலரும்
இறைவனிடத்தில் மனிதர்களும்
காதல் செய்வது நலம் பயக்கும்.
நாளும் நமக்கு உயர்வளிக்கும்.
காமம் இல்லாக் காதலே சிறப்பாகும் ...
எதிர்பார்ப்பற்ற காதலே ஏற்றதாகும்
எதையும் கொடுத்து காதல் பெறாதே !!!
காதலுக்காக எதையும் கொடுக்க மறவாதே !!!
ஆதலினால் இளைஞர்களே!!! யுவதிகளே!!!!
ஆதலினால் இளைஞர்களே யுவதிகளே!!!
காதல் செய்வீர் இன்றே !!! காதல் செய்வீர் இன்றே!!!
மாயக் காதல்வலையில் மாட்டிக் கொண்டு மடியாமல்.
தத்தளித்து தன்னுயிர் இழக்காமல்.
காதலர் தினத்தைக் களிப்போடு கொண்டாடி
உலகம் போற்ற வாழ்ந்திடு நீ
(வே.ர.விஜயலட்சுமி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம் மாவட்டம்)