- கவிஞர் க.முருகேஸ்வரி
கவிஞர் க.முருகேஸ்வரி எழுதிய காதலர் தின சிறப்பு கவிதை.

காதலால் காதலுற்ற
காதலனைக்
காதலுடன் காதலிக்க
காதல் தேடி காதல் கொண்டு
காதலோடு காதலி சென்று
காதலும் காதலுற்று
காதலியுடன் கைகோர்த்து நின்று
காதலனைக் காதலால் தின்று
காதல் செய்து காதல் வென்று
காதலால் காதலாகிக் காதலும்
காதலுடன் காதலுள் கசிந்துருகிப் போகுமே...
ஆதலால்..
காதலில் மருகி
காதலால் உருகி
காதலைப் பருகி
காதல் வடித்து
காதல் படித்து
காதலைக் குடித்து
காதல் வரைந்து
காதலால் கரைந்து
காதலில் நனைந்து
காதல் ரசித்து
காதலை ருசித்து
காதலில் வசித்து
காதலை சுவைத்து
காதலால் களைத்து
காதலில் திளைத்து..
காதல் செய்வோம்
காதல் செய்வோம்.....
காதல் ஒன்றும் குற்றமில்லை ....
கால நேரம் கருதாமல் ...
சாக்கு போக்கு சொல்லாமல்....
பாவம் புண்ணியம் பார்க்காமல் ...
அபத்தம் கிபத்தம்
என்று உளறாமல்...
காதலித்துப் பார்....
காதலுற்றுப் பார்
காதல் செய்து பார்
காதல் தோற்றுப் பார்...
காதல் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை ...
வேண்டுமானால்
கற்றுக் கொள்...
இல்லையேல்
கற்று மற....
காதலும் கற்ற மற....!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}