டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
சென்னை: டிட்வா புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 85,521.76 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 40 கி.மீ.தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது நேராக வடக்கு திசை நோக்கி செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இதற்கு மாறாக புயல் சின்னமானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியச் 134 மி.மீ மழை பதிவாகியுள்ளது. எண்ணூரில் 260 மி.மீ பாரிமுனையில் 250 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதுவரைக்கும் டிட்வா புயலால் 4 பேர் பலியாகியுள்ளனர். 582 கால்நடைகள் பலியாகியுள்ளது.
இந்த கன மழையால் தமிழகம் முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும். இதுவரைக்கும் 85,521.76 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.