டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு

Dec 01, 2025,05:14 PM IST

- கலைவாணி கோபால் 


தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் டிட்வா  புயல் காரணமாக ஏற்பட்ட பெரும் காற்று மற்றும் கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல ஊர்களில் வயல்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல திருவாரூர் மாவட்டத்திலும் நீரில் மூழ்கி கிட்டத்தட்ட 4000 ஏக்கர் நெல் பயிர்கள் மூழ்கி உள்ளன. இது அங்குள்ள விவசாயிகளுக்கு இது பெரும் மன பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 


பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு அரசு தக்க நிவாரணம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதில் தரும் விதமாக பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே கே எஸ் ராமச்சந்திரன் பதிலளிக்கையில் தமிழ்நாட்டில் மொத்தம் 56,000 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 31% பாதிப்பு இருந்தால் மட்டுமே நிவாரணங்கள் வழங்கப்படும் . கண்டிப்பாக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் எனவும் விளக்கியுள்ளார்.




புயல் மழை ஓய்ந்த பின்னர் இதுதொடர்பாக மத்திய நிபுணர் குழு காவிரி டெல்டா பகுதிகளுக்கு வருகை தந்து பாதிப்பை நேரில் ஆய்வு செய்து நிவாரண உதவிகள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


டிட்வா புயல் இன்னும் கூட முடியவில்லை. அது பலவீனமடைந்த நிலையிலும் கூட தமிழ்நாட்டின் வடக்கு கடலோரப் பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது. இதனால் தற்போது வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.


(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!

news

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

news

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

news

திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

news

நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

news

சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

news

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!

news

திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்

அதிகம் பார்க்கும் செய்திகள்