சென்னை : இலங்கையை தொடர்ந்து தமிழகத்தை பதம் பார்த்து வரும் டித்வா புயலின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ளார். சென்னை மழை குறித்தும் அவர் கூறி உள்ள தகவல் சென்னைவாசிகளுக்கு பகீர் கிளப்பி உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடலோர பகுதிகள், மலைப்பகுதிகளில் மையம் கொண்டு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளக்காடாக்கி, புரட்டி போட்டுள்ளது டித்வா புயல். இந்த புயல் சின்னமானது இப்போது எங்குள்ளது, இதன் நகர்வுகள் எப்படி உள்ளது, அடுத்து இது எந்த திசையில் நகரும் என்ற விபரங்கள் அடங்கிய அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவின் விபரம் இதோ...

"டித்வா" புயல், இலங்கையின் மலைப் பகுதிகள், நிலப்பரப்பில் சுமார் 40 மணிநேரம் செலவழித்து, அங்கு கடும் மழையைப் பொழிந்த பிறகு, இறுதியாக வங்காள விரிகுடாவின் திறந்த நீர்பரப்பிற்குத் திரும்பிவிட்டது. இந்த நீண்ட நேரம் நிலப்பரப்பில் இருந்ததன் காரணமாக, புயலின் வேகம் கணிசமாக வலுவிழந்து மெதுவாகச் சென்றது. ஆனால், சமீபத்திய செயற்கைக்கோள் மற்றும் ரேடார் தரவுகளின் படி, தற்போது டித்வா புயல் தமிழகத்தில் டெல்டா மண்டலத்தை நோக்கி மெதுவாக நகரத் துவங்கி உள்ளது.
எதிர்பார்த்தது போலவே, டெல்டா மாவட்டங்கள் முதலில் மிக அதிக மழை முதல் மிதமான மழை வரை பெற்றன. நாகப்பட்டினம் மாவட்டம் அதிக மழை அளவைப் பதிவு செய்துள்ளது. அதில், கோடியக்கரை 250.8 மி.மீ, அதைத் தொடர்ந்து வேதாரண்யம் (185.6 மி.மீ), வேளாங்கண்ணி (133.6 மி.மீ), திருப்பூண்டி (123.2 மி.மீ), மற்றும் நாகப்பட்டினம் நகரம் (116.9 மி.மீ) எனப் பதிவாகியுள்ளது. பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பிற கடலோரப் பகுதிகளும் 70 மி.மீ-க்கும் அதிகமான மழையைப் பதிவு செய்துள்ளன.
இப்போது, காரைக்கால் மற்றும் சென்னை ரேடார் காட்சிகளில் காணப்படுவது போல, நாகப்பட்டினம் – கடலூர் – புதுச்சேரி மண்டலத்திற்கு அருகில் புதிய மேகக்கூட்டங்கள் உருவாகுவதால், மழையின் திசை வடக்கு நோக்கி மாறி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு, மழை மேகங்கள் படிப்படியாக வடக்கு நோக்கி நகரும். இன்று, டெல்டா மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் கனமழை தொடரும், அதே சமயம் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கும்.
சென்னையில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இன்று மாலையோ அல்லது இரவிலோ மழையின் தீவிரம் அதிகரிக்கும். நாளை (நவம்பர் 30) வட தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலான கனமழை முதல் மிகக் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதனால் மக்களே கவனமாக இருங்கள். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}