சென்னை : இலங்கையை தொடர்ந்து தமிழகத்தை பதம் பார்த்து வரும் டித்வா புயலின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ளார். சென்னை மழை குறித்தும் அவர் கூறி உள்ள தகவல் சென்னைவாசிகளுக்கு பகீர் கிளப்பி உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடலோர பகுதிகள், மலைப்பகுதிகளில் மையம் கொண்டு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளக்காடாக்கி, புரட்டி போட்டுள்ளது டித்வா புயல். இந்த புயல் சின்னமானது இப்போது எங்குள்ளது, இதன் நகர்வுகள் எப்படி உள்ளது, அடுத்து இது எந்த திசையில் நகரும் என்ற விபரங்கள் அடங்கிய அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவின் விபரம் இதோ...

"டித்வா" புயல், இலங்கையின் மலைப் பகுதிகள், நிலப்பரப்பில் சுமார் 40 மணிநேரம் செலவழித்து, அங்கு கடும் மழையைப் பொழிந்த பிறகு, இறுதியாக வங்காள விரிகுடாவின் திறந்த நீர்பரப்பிற்குத் திரும்பிவிட்டது. இந்த நீண்ட நேரம் நிலப்பரப்பில் இருந்ததன் காரணமாக, புயலின் வேகம் கணிசமாக வலுவிழந்து மெதுவாகச் சென்றது. ஆனால், சமீபத்திய செயற்கைக்கோள் மற்றும் ரேடார் தரவுகளின் படி, தற்போது டித்வா புயல் தமிழகத்தில் டெல்டா மண்டலத்தை நோக்கி மெதுவாக நகரத் துவங்கி உள்ளது.
எதிர்பார்த்தது போலவே, டெல்டா மாவட்டங்கள் முதலில் மிக அதிக மழை முதல் மிதமான மழை வரை பெற்றன. நாகப்பட்டினம் மாவட்டம் அதிக மழை அளவைப் பதிவு செய்துள்ளது. அதில், கோடியக்கரை 250.8 மி.மீ, அதைத் தொடர்ந்து வேதாரண்யம் (185.6 மி.மீ), வேளாங்கண்ணி (133.6 மி.மீ), திருப்பூண்டி (123.2 மி.மீ), மற்றும் நாகப்பட்டினம் நகரம் (116.9 மி.மீ) எனப் பதிவாகியுள்ளது. பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பிற கடலோரப் பகுதிகளும் 70 மி.மீ-க்கும் அதிகமான மழையைப் பதிவு செய்துள்ளன.
இப்போது, காரைக்கால் மற்றும் சென்னை ரேடார் காட்சிகளில் காணப்படுவது போல, நாகப்பட்டினம் – கடலூர் – புதுச்சேரி மண்டலத்திற்கு அருகில் புதிய மேகக்கூட்டங்கள் உருவாகுவதால், மழையின் திசை வடக்கு நோக்கி மாறி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு, மழை மேகங்கள் படிப்படியாக வடக்கு நோக்கி நகரும். இன்று, டெல்டா மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் கனமழை தொடரும், அதே சமயம் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கும்.
சென்னையில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இன்று மாலையோ அல்லது இரவிலோ மழையின் தீவிரம் அதிகரிக்கும். நாளை (நவம்பர் 30) வட தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலான கனமழை முதல் மிகக் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதனால் மக்களே கவனமாக இருங்கள். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}