இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு

Mar 02, 2026,05:20 PM IST

டெஹ்ரான்:  ஏவுகணைத் தாக்குதல்களில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இலக்கு வைக்கப்பட்டது என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.


ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை இலக்காகக் கொண்டு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இன்று தெரிவித்துள்ளது.


சனிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.




டெல் அவிவில் உள்ள அரசாங்க வளாகம் மட்டுமல்லாது, ஹைஃபாவில் உள்ள பாதுகாப்பு மற்றும் ராணுவ மையங்கள் மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.


இந்த பத்தாவது கட்டத் தாக்குதலில் 'கெய்பர்' ரக பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வரும் இந்த மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியம் பெரும் பதற்றத்தில் உள்ளது. வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சூழல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தை மூலம் அமைதி காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு

news

பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்

news

இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!

news

மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!

news

இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!

news

நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!

news

இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works

news

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்

news

நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்