Tamil Poem: மருதாணி!

Jul 24, 2026,12:12 PM IST

- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்


அழகிய இதழ்களை ஆசையோடு பறித்து 


அம்மியில் வைத்து

மையாக அரைத்து 


உடன் பாக்கு வைத்து

மசித்து 


விரல் நுனிகளில் தொப்பி வைத்து 


உள்ளங்கையில் அழகிய வட்டங்கள் வரைந்து 


இரு கையில் இடச்சொல்லி 

தாயிடம் அடம்பிடித்து 


உறங்கும் வரையிலும்

ஆடாமல் பாதுகாத்து 




கனவிலும் செக்கச் சிவந்ததாய் நினைத்து 


அதிகாலை கண்விழித்து

அகம் மகிழ்ந்து 


கைகளின் சிவப்பில்

உள்ளம் பூரித்து 


குழந்தையில் ஆனந்தமாக மகிழ்ந்து குதித்து


நினைவுகள்

கனவுகளாய் குழந்தை பருவத்தை நினைவூட்டிச் சென்றது


(அமிர்தம் ரமேஷ், பெதப்பம்பட்டி, உடுமலை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்