ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!

Jul 23, 2026,12:43 PM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


குயில் வந்து 

கூவும் என்று


கூட்டை விட்டு 

பறந்து வந்தேன்


காகம் வந்து 

அமர்ந்து கொண்டு


கத்திக் கரைகிறது 

கூட்டமாக சேர்ந்து 


காட்டத்தோடு கூட்டை 

களைத்துவிட எண்ணுகிறேன்


பாவம் அதுவென்றே

பரிதாபம் கொள்ளுகிறேன்




கோபம் குறைந்து

குளிரும் மனசு


குயில் இடும் 

முட்டைக்கும் சேர்த்து


அடை காப்பதும் 

காகம் தானே


என்று விடைபெற்றேன் 

வேறு இடம்


மயில் ஆடும் 

சோலையிலே


மானும் துள்ளி 

ஆடுதே


ஓடும் நதி

ஓசையிலே


தோடி ராகம் 

கேட்குதே


பறவைகளின் சத்தம் 

பாங்காக ஒலிக்குதே


பழங்கள் உண்ண 

பறவை எச்சத்திலே


விதை கிடந்து 

முளைக்குதே


விதை முளைத்து 

விருட்சமாக


பறவைகளும் வசிக்குதே


வான் மழையும் 

காற்றும் தந்து


வாழ்வு கொடுக்கும் 

மரங்களே


மரம் வளர்ப்போம் 

மழை பெறுவோம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

குழந்தை

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்