- கலைவாணி கோபால்,
சென்னை: டிட்வா புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் சூறாவளிக் காற்றின் வேகம் காரணமாக 4 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 54 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், தூத்துக்குடி, மதுரை, ஹைதராபாத், திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் சிறிய ரக விமானங்களான ஏடிஆர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை பெரும் சூறாவளி காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்காது என்பதற்காக சென்னையில் இருந்து போவதற்கும் அங்கிருந்து திரும்ப வருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு தெற்கில் 350 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புயல் மையம் கொண்டுள்ளது
ரெட் அலர்ட் மாவட்டங்கள்

டிட்வா புயல் காரணமாக சூறாவளி உடன் சேர்ந்து பெரும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர் போன்ற மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}