- கலைவாணி கோபால்,
சென்னை: டிட்வா புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் சூறாவளிக் காற்றின் வேகம் காரணமாக 4 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 54 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், தூத்துக்குடி, மதுரை, ஹைதராபாத், திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் சிறிய ரக விமானங்களான ஏடிஆர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை பெரும் சூறாவளி காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்காது என்பதற்காக சென்னையில் இருந்து போவதற்கும் அங்கிருந்து திரும்ப வருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு தெற்கில் 350 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புயல் மையம் கொண்டுள்ளது
ரெட் அலர்ட் மாவட்டங்கள்

டிட்வா புயல் காரணமாக சூறாவளி உடன் சேர்ந்து பெரும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர் போன்ற மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
{{comments.comment}}