- கலைவாணி கோபால்,
சென்னை: டிட்வா புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் சூறாவளிக் காற்றின் வேகம் காரணமாக 4 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 54 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், தூத்துக்குடி, மதுரை, ஹைதராபாத், திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் சிறிய ரக விமானங்களான ஏடிஆர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை பெரும் சூறாவளி காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்காது என்பதற்காக சென்னையில் இருந்து போவதற்கும் அங்கிருந்து திரும்ப வருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு தெற்கில் 350 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புயல் மையம் கொண்டுள்ளது
ரெட் அலர்ட் மாவட்டங்கள்

டிட்வா புயல் காரணமாக சூறாவளி உடன் சேர்ந்து பெரும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர் போன்ற மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
சிரஞ்ஜீவி படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கா? டைரக்டர் விளக்கம்
தம்பி அண்ணாமலைக்கு.. தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம்.. சீமான்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கம் வெள்ளி விலை இன்றும் புதிய உச்சம்!
இயற்கை வழிபாடும் பொங்கலும்!
வாழ்வில்....!
தை மகளே வருக.. வருக.. வந்தாச்சு பொங்கல்.. பொங்கட்டும் மங்கலம்.. நல்வாழ்த்துகள்!
பறவைகள் பலவிதம்.. ஆர்வலர்களுக்கு ஓர் அன்ரபான வேண்டுகோள்!
போகிப் பண்டிகை.. வரலாறும் பண்பாடும்!
{{comments.comment}}