- கலைவாணி கோபால்,
சென்னை: டிட்வா புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் சூறாவளிக் காற்றின் வேகம் காரணமாக 4 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 54 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், தூத்துக்குடி, மதுரை, ஹைதராபாத், திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் சிறிய ரக விமானங்களான ஏடிஆர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை பெரும் சூறாவளி காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்காது என்பதற்காக சென்னையில் இருந்து போவதற்கும் அங்கிருந்து திரும்ப வருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு தெற்கில் 350 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புயல் மையம் கொண்டுள்ளது
ரெட் அலர்ட் மாவட்டங்கள்

டிட்வா புயல் காரணமாக சூறாவளி உடன் சேர்ந்து பெரும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர் போன்ற மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு
பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!
இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!
நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!
இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!
{{comments.comment}}