மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
மார்கழி திங்கள் பிறந்ததம்மா....
மாதவன் வருகின்ற
நேரமம்மா.......
மாலவன் திருவடி
பாருமம்மா......
விடிவெள்ளி
வானில் வருமுன்னே.....
விரும்பிய நாயகன்
கரம் பற்ற.....
கனவும் நனவாகிட
துயில் களைந்து......
ஆதவன்
வருமுன்னே
நீராடி நீறிட்டு.......
வாசலில்
மாக்கோலம்
மனதினிலே
மங்கையிவள் மணக்கோலம்.......
குத்து விளக்கேற்றி
குலதெய்வமதை
அழைத்து
மலர்ச்சரங்கள்
மாலையிட்டு.......
மஞ்சள் குங்குமம்
மணக்க.....
மல்லிகை பூ கணக்க
கூந்தலில்
அள்ளி முடிக்க...
தேவர்கள்
வாழ்த்துரைக்க......
மார்கழியில் மதுர
கீதம் பாடி......
நலம் தரும் நாரணன்
நாமம் நெஞ்சினிக்க......
தெருவெல்லாம்
தெய்வீகம்......
மங்கையரின்
மகிழ்ச்சி
வெள்ளம்......
பூரண கும்பம் வைத்து
பூபாளம்
பாடிடுவோம்.....!
(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)