அன்பு!
Feb 14, 2026,05:06 PM IST
- தீபா ராமானுஜம்
முகம் பாராமலே
மனதை நேசிக்கும் அன்பு
இனியது...
மகிழ்ச்சியாய் சிரிக்கும் தருணங்களில்
ரசிக்கும் அன்பு
அழகானது...
துயர் மிகுந்த வேளையிலே தலை கோதும்
அன்பு
பேரழகானது...
நேசித்த இதயத்தை காயப்படுத்தாத
அன்பு
மிக அழகானது...
உனக்காக நான் என்றும் இருப்பேன் என்று உணர்த்தும்
அன்பு
ஆழமானது...
மௌனத்திலும் மனதைப் புரிந்து கொள்ளும்
உயர்ந்தது...
கவலைகள் போக்க கை கோர்த்து உடன் வரும்
அன்பு
உண்மையானது...
துவண்டு போகும் வேளையிலே தோள் சாய்த்து ஆறுதல் தரும்
அன்பு
அருமையானது...
எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத
அன்பு
நிலையானது...
விழியின் ஒளியாக
இதழின் சிரிப்பாக
மனதின் மகிழ்ச்சியாக
வாழ்வின் வசந்தமாக
வரும் அன்பு என்றும் வரமானது...!