Poem on Love: காதல்!

Su.tha Arivalagan
Apr 24, 2026,02:22 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


அதிசயமானது காதல்..

அவசியமானது

காதல்

அவசரமானது

காதல்

பரவசமானது

காதல்


உயிரினில் உயிரினை ஒருமுகமாக்கும்

தன் முகம் மறந்து

அவள் முகம் ரசிக்கும் 

தனித்துவமானது காதல்

மிக மிக கவித்துவமானது காதல்




சொல்லாமல் அள்ளிச் செல்லும் வகையானது.

காதல் சுவையானது..


சொல்லிக் கொண்டாலும்

மேலும் சொல்ல

சுவை கூடுது..


எங்கோ உடல் இருந்தபோதும் 

உயிரானது...

ஒன்றில் ஒன்றாய்ச் சேரும் போது பொருள் ஆகுது..


காற்றோடு கவிதைப் பேசும் கலையானது..!

மேலும் உள்ளூரத் துணிவை ஊட்டும் மலையானது.. 


விழியின் வழியே

புகுந்து மனத்தில்

நமை ஆள்வது..


காதல் என்ற ஒற்றைச் சொல்லில் புவி வாழுது..


அழகழகானது காதல்..

மிக மிக பேரழகானது காதல்


ஈருடல் ஓருயிராகிடும் போது

இதயத்தில் மெல்லிசைப் பாடியும் போது


உருவமில்லாதது காதல்..

இது ஒரு கர்வமில்லாதது

காதல்..


பார்வையில் மோதிய காதலும் உண்டு..


மோதலில் பாவிய காதலும் உண்டு..


காவியமானது காதல்..

ரசித்திட

ஓவியமானது காதல்!


(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).