Deepa Ravi Poem: கவிதையென்பது!
- ஔவை அ.ர.தீபாரவி
கற்பனை
வானின்
கட்டுக்கு
அடங்காத
ஊற்று
ஒட்டுமொத்த
ஒப்பனைச்
சொற்கள்
அசைந்தாடும்
கீற்று
அகக்
கடலில்
போடப்படும்
தூண்டில்
கொக்கி
சிந்திக்க
வைத்துச்
சிறகடிக்கச்
செய்யும்
சிற்பி
உணர்வுகள்
யாவையும்
கொட்டித்
தீர்க்கும்
வடிகால்
விழிகள்
ஊடுருவ
மனத்தில்
ஏற்படும்
கிளர்ச்சி
கருத்தை
நனி
சொட்டச்
சொல்லும்
ஓராயிரம்
நினைவுகள்
சுமக்கும்
பேசாத
காவியம்
சொற்களைச்
செதுக்கிச்
சிலை
செய்யும்
ஓவியம்
கனவுகளைக் கட்டவிழ்க்கும்
கைவிரல்
நெய்யும்
பாவியம்
(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று புதுக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).