- அ. தாமஸ்
நான் விரும்பி நேசிக்கும் திரையே;
நான் தொடர்ந்து வாசிக்கும் உரையே;
என்னை அன்பால் ஆட்கொண்ட சிறையே ;
என்னுள் நல்லெண்ணம் புகுத்திய மறையே ;
என்னை மகிழ்ச்சியால் நனைத்திட்ட மழையே ;
என் துன்பம் உதிர்த்த சாரலே ;
நான் கவிதையாய் நேசிக்கும் காவியமே ;
என் மனம் நிரம்பிய அழகோவியமே;
வாழிய நீ வாழியவே!
எனக்காய் உதிரம் உதிர்த்து உறவினில் கலந்தவள் நீ !

தினமும் என்னை நினைத்து உள்ளுக்குள் கனன்றவள் நீ !
கனவாய்க் களைந்தாலும் என் நினைவில் நிலைத்தவள் நீ!
நான் இமயம் அடைந்திட துணையாய் நின்றவள் நீ !
கலங்கி நின்ற போது கண்ணீர் துடைத்து கரம் கொடுத்தவள் நீ !
நான் வளங்கள் பல பெற்று நலமாய் வாழ்ந்திடவே
இறைவேண்டல் தினம் செய்தவள் நீ !
என் வரலாற்றைப் படிப்பவளும் நீ!
நாளைய உன் வரலாற்றைப் படைப்பவளும் நீ !
நல்மண மலரே! பலவண்ண மயிலே! என் எண்ண முகிலே!
நீ வேண்டும் வளங்களை வரங்களாய்ப் பெற்று
நலமோடு வாழ்ந்திடவே வாழ்த்தி மகிழ்கிறேன்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}