- அ. தாமஸ்
நான் விரும்பி நேசிக்கும் திரையே;
நான் தொடர்ந்து வாசிக்கும் உரையே;
என்னை அன்பால் ஆட்கொண்ட சிறையே ;
என்னுள் நல்லெண்ணம் புகுத்திய மறையே ;
என்னை மகிழ்ச்சியால் நனைத்திட்ட மழையே ;
என் துன்பம் உதிர்த்த சாரலே ;
நான் கவிதையாய் நேசிக்கும் காவியமே ;
என் மனம் நிரம்பிய அழகோவியமே;
வாழிய நீ வாழியவே!
எனக்காய் உதிரம் உதிர்த்து உறவினில் கலந்தவள் நீ !

தினமும் என்னை நினைத்து உள்ளுக்குள் கனன்றவள் நீ !
கனவாய்க் களைந்தாலும் என் நினைவில் நிலைத்தவள் நீ!
நான் இமயம் அடைந்திட துணையாய் நின்றவள் நீ !
கலங்கி நின்ற போது கண்ணீர் துடைத்து கரம் கொடுத்தவள் நீ !
நான் வளங்கள் பல பெற்று நலமாய் வாழ்ந்திடவே
இறைவேண்டல் தினம் செய்தவள் நீ !
என் வரலாற்றைப் படிப்பவளும் நீ!
நாளைய உன் வரலாற்றைப் படைப்பவளும் நீ !
நல்மண மலரே! பலவண்ண மயிலே! என் எண்ண முகிலே!
நீ வேண்டும் வளங்களை வரங்களாய்ப் பெற்று
நலமோடு வாழ்ந்திடவே வாழ்த்தி மகிழ்கிறேன்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
{{comments.comment}}