Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??

Jul 14, 2026,05:16 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி


இப்படி ஒரு சூழலில் 

இப்படி ஒரு வாழ்வை 

இப்படியே வாழ்ந்திட ஏங்குகிறது 

என் மனது ...


தாள் கொண்ட நீரைத் தலையாலே 

தான் தரும் தென்னையும்...

பச்சைப் பட்டாடை உடுத்திய நில மகளும்...




அங்கும் இங்குமாய் காற்றில் அலைந்து

இன்னிசை பாடும் தென்னங்கீற்றின் ஓசையும் ...

காணி நிலம் வேண்டும் என்று பாடினானே....

முண்டாசுக் கவிஞன் ...


அவன் வரிகளை 

அசை போட்டேன்... 

நெஞ்சம் ஆனந்தக் கூத்தாடுகிறது ...


வாய்க்குமா இப்படி ஒரு வாய்ப்பு ...


கவலைகள் மறந்து 

கடமைகள் மறந்து 

பேராசைகள் துறந்து 

இயற்கையின் அமைதியில் இணைந்திடவே 

ஆசை கொண்டேன் ...

இறைவா தருவாயா எனக்கும் ஒரு வரம்... ??


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி

news

"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!

news

"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

news

யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

news

Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??

அதிகம் பார்க்கும் செய்திகள்