- க.யாஸ்மின் சிராஜூதீன்
பூக்களின் பல வண்ணம் பார்த்து ரசித்து மகிழலாம்...
வண்ணத்துப்பூச்சியின் பல வண்ணம் பார்த்து ரசித்து வியக்கலாம்....
மனிதர்களின் பல வண்ணம்
எண்ணத்தில், அன்பில், இன்பத்தில்,
துன்பத்தில், சண்டையில்,
விவாதத்தில் அரவணைப்பில்,
கடுஞ்சொல்லில் ....இன்னும் நீளுமே
இனம் புரியா பலவண்ணமே....
சாதகமான சூழ்நிலையில் இனிய வண்ணமே ...
விவாதத்தில் தெரியும் சுயவண்ணமே...
நல்லதோ கெட்டதோ வெட்ட வெளிச்சம் ஆகுமே.....

வார்த்தைகள் கூர்மையான ஆயுதமே
அதை ஆளத் தெரிந்தவன் பொறுமை சாலியே.....
அள்ளித் தெளிப்பவன் மீண்டும் அள்ள முடியாது என்று
அறியா அறியாமை இருள் சூழ்ந்தவனே.....
பணம் முக்கியம் தான்
அதற்காக குணம் இழக்காதே...
காலங்கருதினால் பணம் ஒரு பொருட்டல்ல..
பணம் ஒரு அத்தியாவசியம்
அதுவே நம்மை ஆளக்கூடாது
நாம்தான் வழிநடத்த வேண்டும்...
ஒவ்வொருவரும் பலதரப்பட்ட மனித
வண்ணங்களை படிக்க வேண்டும்...
சிறிதெனினும் நம் சுயமரியாதையை காக்க....
எடுத்துக்காட்டாக இருக்கும் வண்ணம் மட்டும் படித்து
எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்....
தேவையற்றவைகளை புறந்தள்ள வேண்டும்.....
வண்ணம் பல வண்ணம் பச்சோந்தியே வியக்கும் வண்ணம்..
பலவண்ணம் மனித மனங்களின் எண்ணம்...
ரசிக்கும் வண்ணம் பெற்று ரசித்து வாழுவோம் உலகிலே....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??
{{comments.comment}}