- க.யாஸ்மின் சிராஜூதீன்
பூக்களின் பல வண்ணம் பார்த்து ரசித்து மகிழலாம்...
வண்ணத்துப்பூச்சியின் பல வண்ணம் பார்த்து ரசித்து வியக்கலாம்....
மனிதர்களின் பல வண்ணம்
எண்ணத்தில், அன்பில், இன்பத்தில்,
துன்பத்தில், சண்டையில்,
விவாதத்தில் அரவணைப்பில்,
கடுஞ்சொல்லில் ....இன்னும் நீளுமே
இனம் புரியா பலவண்ணமே....
சாதகமான சூழ்நிலையில் இனிய வண்ணமே ...
விவாதத்தில் தெரியும் சுயவண்ணமே...
நல்லதோ கெட்டதோ வெட்ட வெளிச்சம் ஆகுமே.....

வார்த்தைகள் கூர்மையான ஆயுதமே
அதை ஆளத் தெரிந்தவன் பொறுமை சாலியே.....
அள்ளித் தெளிப்பவன் மீண்டும் அள்ள முடியாது என்று
அறியா அறியாமை இருள் சூழ்ந்தவனே.....
பணம் முக்கியம் தான்
அதற்காக குணம் இழக்காதே...
காலங்கருதினால் பணம் ஒரு பொருட்டல்ல..
பணம் ஒரு அத்தியாவசியம்
அதுவே நம்மை ஆளக்கூடாது
நாம்தான் வழிநடத்த வேண்டும்...
ஒவ்வொருவரும் பலதரப்பட்ட மனித
வண்ணங்களை படிக்க வேண்டும்...
சிறிதெனினும் நம் சுயமரியாதையை காக்க....
எடுத்துக்காட்டாக இருக்கும் வண்ணம் மட்டும் படித்து
எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்....
தேவையற்றவைகளை புறந்தள்ள வேண்டும்.....
வண்ணம் பல வண்ணம் பச்சோந்தியே வியக்கும் வண்ணம்..
பலவண்ணம் மனித மனங்களின் எண்ணம்...
ரசிக்கும் வண்ணம் பெற்று ரசித்து வாழுவோம் உலகிலே....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
{{comments.comment}}