விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
- ஔவை அ.ர.தீபாரவி
விதைக்குள்
காடிருக்கு
அந்தக்
கூட்டில்
ஒளிந்திருக்கு
விதைத்தவர்
உறங்கினாலும்
இங்கே
விதைகள்
உறங்கிடுமோ?
உயிருக்கு
வழியாக
உயிர்வளி
தருவது
மரந்தானே
நா
ருசிக்கப்
பழங்களைத்
தருவதும்
அதுதானே
மண்ணுக்கும்
விண்ணுக்கும்
பாலமமைக்க
மழையைத்
தருகுதே
மானிடர்க்கு
என்றும்
மருந்தும்
விருந்தும்
ஆகிறதே
இளைப்பாற
நிழலும்
மழலை
மகிழ
ஊஞ்சலுமாகுதே
பல்லுயிர்க்கும்
புகலிடமாம்
சரணாலயமாம்
மரங்கள்
வரங்களாம்
உணவின்றிப்
பலநாள்கள்
நீரின்றி
சிலநாள்கள்
வாழலாம்
உயிர்வாழ்தல்
இயலுமோ?
(கவித்துளி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).