Deepa Ravi Poem: உயிரும் உணர்வும் தமிழே!
Apr 17, 2026,04:53 PM IST
- ஔவை அ.ர.தீபா ரவி
தாயான
தமிழே
தரமான
மொழியே
சேயான
எம்மைச்
செதுக்கிடும்
உளியே
வாயாரப்
பேசிடவே
வருவாய்
உயிர்வளியே
ஓயாத
அலையாக
உறவாடும்
வழியே
சாயாத
செங்கோலாய் ஆட்சிசெய்யும்
கிளியே
மாயாத
பெருமைகள்
மங்காத
ஒளியே
காயாத
குளுமையைக் கவர்ந்திடும்
துளியே
(தமிழ் அருவி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).