Tamil Poem by Ilangovan: உயிரும் நீயே.. உணர்வும் நீயே!

Apr 17, 2026,03:52 PM IST

- சி. இளங்கோவன்


உயிரைத் தந்து 

உலவச் செய்தவள் 

நீயே 


உணர்வில் கூட 

என்னை அறிந்தவள் 

நீயே


உன்னைப் போலொரு 

அன்பைப் பொழிந்தவர் 

இல்லை 


நீயும் காட்டும் 

அன்புக்கு எல்லை 

இல்லை




பட்டினி கிடந்தும் 

எந்தன் பசியைத் 

தீர்த்தவள் 


பசியை நானும் 

அறியா வண்ணம் 

வளர்த்தவள்


மூப்பை அடைந்து 

இறைவன் அழைக்கும் 

வரையிலும் 


பணிவிடை செய்து 

எந்தன் கடனைத் 

தீர்க்கனும்


உயிரைத் தந்து 

உணர்வில் கலந்த 

தாயே 


மகளின் வடிவில் 

வந்தும் 

மகிழ்வித் தாயே


(கவிஞர் சி. இளங்கோவன், வேலூர், வேலூர் மாவட்டம். தமிழ் அருவி வழங்கும் சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு பாடப்பட்ட கவிதை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்