- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க மாவட்ட அளவில் Resource person ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தேன்...
திரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் எங்களுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டது... மாநில அளவில் ஒரு PPT தயாரிக்கப்பட்டு அதை காண்பித்து பயிற்சி கொடுப்பார்கள்...
குழந்தைகள் படைப்பாளராக.... என்ற தலைப்பில் இரண்டு குழந்தைகள் அதில் இடம் பெற்றிருந்தனர்.என் மாணவச் செல்வங்கள் போல் எனக்குத் தெரிந்தது... அருகில் இருந்த ஆசிரியையிடம் என் வகுப்பு மாணவர்கள் போல் இருக்கிறார்கள்... மீண்டும் ஒரு முறை அந்தப் படத்தைக் காட்ட சொல்லலாமா என்றேன்... வேண்டாம் மிஸ்...வேற குழந்தைகளாக இருக்கும் என்றார்..

நான் எழுந்து அதை மீண்டும் காட்ட சொன்னேன்... ஆமாம்...அது என் செல்லங்கள்... பிரணிதாவும், கமலேஷும்....
என் கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ் என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்தேன். மாநில அளவிலான கருத்தாளர்கள் என்னை அழைத்து பாராட்டினார்கள்...
வகுப்பில் என் மாணவச் செல்வங்களிடம் இதைப் பகிரும் பொழுது ஆரவாரமாகக் கைதட்டினார்கள்... ஒவ்வொரு பருவத்திற்கும் கருத்தாளராக செல்லும் பொழுதெல்லாம் எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும்... மாநில அளவிலான பயிற்சி வீடியோவில், பயிற்சிக் கையேடுகளில் என் வகுப்பு மாணவர்கள் இடம் பெற்று இருப்பார்கள்.....
ஒரு முறை என் புகைப்படமும் இடம் பெற்று இருந்தது.. நான் பயிற்சிக்கு சென்றிருக்கிறேன் என்றால்... பயிற்சி முடிந்து திரும்பியதும் என் மாணவர்கள்...மிஸ்,இந்த வாட்டி நம்ம கிளாஸ் ஃபோட்டோ வந்ததா என்று ஆர்வமுடன் கேட்பார்கள்....
இதை விட ஒரு சிறப்பான தருணம் என்னவென்றால்.... மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி புத்தகத்திலும் என் மாணவச் செல்வங்களின் புகைப்படங்கள் இரண்டு முறை இடம்பெற்றுள்ளன....

நான் ஒவ்வொரு செயல்பாட்டையும் விடுபடாமல் இயன்றவரை செய்து முடிப்பேன்... என் மாணவர்களும் எந்த ஒரு வேலை கொடுத்தாலும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பார்கள்..
அதை மாநில அளவிலான குழுவில் பதிவிட்டதன் விளைவு தான் இந்த அங்கீகாரம்....இதனால் கிடைத்ததே இந்த பாராட்டுக்கள்...
மேலும் கலைத் திருவிழாவில் என் வகுப்பு மாணவி வசுமிதாவிற்குப் பேச்சுப் போட்டியில் பயிற்சி கொடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கச் செய்தேன், மாநில அளவிலும் கலந்து கொண்டாள். கனவு ஆசிரியர் இதழில் வண்ண வண்ண வகுப்பறை பகுதியில் என் வகுப்பறை இடம் பெற்றது, அந்த இதழில் என்னுடைய பேட்டி இடம் பெற்றது.
மாணவர்களால் நான்... மாணவர்களுக்காக நான் ...
அட்டகாசம் தொடரும்...
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
{{comments.comment}}