- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
மகளிர் தினம்.
அன்று தர்ஷன் மீது எனக்கு ஒரு கோபம் இருந்தது. அவனைத் திருத்த வேண்டி பொய்க்கோபம். அவனைப் பார்க்காமல், அவனிடம் பேசாமல் இருந்தேன்.
Miss உங்களுக்குத் தான் பூ கொண்டு வந்திருக்கேன். வச்சுக்கோங்க... வச்சுக்கோங்க.... என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.
நானும் அவன் சொல்லும் போதெல்லாம் எங்கு வைத்திருக்கிறான் என்று கண்களால் தேடினேன். எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
11 மணி போல் பூவ வச்சுக்கோங்க Miss என்றான். வேறு வழியில்லாமல் எங்கடா இருக்கு பூ என்று கேட்டேன். ஒரு டம்ளர் நிறைய செம்பருத்திப் பூக்கள் மேசை மீது இருந்தன,

அதைக் காண்பித்து, இதோ Miss உங்களுக்கு தான் என்றான். டேய் இத எப்படிடா தலையில் வைப்பது (மனதிற்குள் சொல்லிக்கொண்டே), எனக்காக தான எடுத்து வந்த, என் கையில் கொடு என்றதும் குஷியாகி என் கையில் கொடுத்தான்.
இதை விட வேறு என்ன பரிசு யார் கொடுத்து விட முடியும். பொய்க்கோபம் போன இடம் தெரியவில்லை...
கள்ளங்கபடமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகள் உலகத்தின் தேவதைகள் தான் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்.
அட்டகாசம் தொடரும்.
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
Tamil Poem: ரோஜா மலர்கள்!
Santhi Sinnathambi poem: வழிமேல் விழி வைத்து!
மழைக்கால கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டு வர திட்டம்
Miss உங்களுக்குத் தான் பூ கொண்டு வந்திருக்கேன்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு
ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி: பாமக அன்புமணி தீவிர ஆலோசனை!
Heat Wave warning: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி...இணையத்தைக் கலக்கும் அதிரடித் தகவல்!
{{comments.comment}}